Enna Enna Thedi Vantha Anjala Lyrics

Lyrics & meaning

Ava Enna

KarthikV.V. Prassanna

FromVaaranam Aayiram ReleasedOctober 2, 2008

Choose your script

Read the Song Lyrics

Lyrics text size: 100%

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்லை இல்லை நெருப்பு தானே நெஞ்சுல

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல

ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் தின்னா

அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போன மண்ணா

ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போன மண்ணா

அடங்காக் குதிரையைப் போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப் போல பூவப் போல மாத்தி விட்டாளே

படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல புன்னகையால
எதுவோ எங்கள சேர்க்க
இருக்கு கயித்துல தோக்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்னு ஆடிப் பார்த்தோமே

துணியால் கண்ணையும் கட்டி
கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோ டா

மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப் போல மீனப் போல
தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே

வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் எம்மா வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல

ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் தின்னா

அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போன மண்ணா